
பழமைவாதமும் பாரம்பரிய முறைகளும் இக்கால உலகத்தோடு சேர்ந்தோடுவதற்கு உதவாது என்பதைப் புரிந்துகொண்டு அரச துறையில் பல மாற்றங்களையும் யுக்திகளையும் உட்புகுத்தி வெற்றியும் கண்டவர். அவர் விட்டுச் செல்லும் சுவடுகள் காலமாற்றத்தால் அழிக்கப்பட முடியாதவை. அவரை நினைக்கும் போது அவரது வேகமும் சுறுசுறுப்பும் தான் முதலில் நினைவில் நிற்கும். இத்தனை மெல்லிய மனிதரில் இத்தனை ஆளுமைகளா என வியக்கத் தோன்றும். அகவை அறுபதை அடையும் இந்நாளில் அவர் இலட்சியங்கள் வெற்றிபெற்றிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
***
பிரதம செயலாளரின் சேவை சார்ந்த விடயங்களை பதிவுசெய்யும் நோக்கோடு உருவாக்கப்பட்டதே இவ் வலைப்பதிவு. அவரதும் அவரது சேவை சார்ந்ததுமான விடயங்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எமது மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளுங்கள். இதுவரை பல்வேறுபட்ட ஆக்கங்களை எமக்குத் தந்துதவிய அனைத்து அன்பர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.அன்புடன்
எஸ்.முரளி
OIS TEAM
மின்னஞ்சல்: oisteam@yahoo.com
No comments:
Post a Comment