
அன்பின் உறைவிடமாய், பண்பின் பிறப்பிடமாய் பாசத்தின் சிகரமாய், கடமையில் இலட்சிய வீரனாய் எம்மை வழிநடத்தும் பெருமதிப்புக்குரிய தலைமைச் செயலாளர் திரு.சி.ரங்கராஜா அவர்கள் 2009.02.02 இல் அகவை அறுபதைப் பூர்த்தி செய்வதை முன்னிட்டு எனது வாழ்த்தைத் தெரிவிக்கின்றேன். மேலும் இவர் 'பெரிய நெருக்கடிகளுக்கிடையே தான் , இறைவன் வெற்றி பெறுவதற்கான வழியையும் வகுத்திருக்கின்றான்' என்ற அமுத வாக்கிற்கு இணங்க தனது அரச சேவையில் பல வெற்றிகளைப் பெற்று, முதலிடத்தில் இருக்கின்றார். இவரது சேவைகளையும் இவருக்குள் இருக்கும் திறமைகளையும் நாம் எல்லோரும் பகிர்ந்து கொள்வதற்காக இவரின் உன்னத வழிநடத்தலினால், உச்சப்பயன்பாட்டினைப் பெற ஏதுவாக, பிரத்தியேக இணையத் தளம் (வலைப்பதிவு) ஒன்றை உருவாக்கும் எமது OIS குழுவினருக்கும் எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றேன்.
- அன்புடன் இ.இரவீந்திரன்.
No comments:
Post a Comment