With other 7 Chief Secretaries on 01.07.2004
Saturday, May 30, 2009
Yoharajan added some more photos of CS.
With other 7 Chief Secretaries on 01.07.2004
"கணினி ஆசான்" இறுவட்டு வெளியீடு

வடக்கு கிழக்கு மாகாண பிரதம செயலாளராக கடமையாற்றி 01.01.2007 தொடக்கம் வட மாகாண பிரதம செயலாளராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் எம் பெருமதிப்பிற்குரிய திருவாளர் எஸ்.ரங்கராஜா
அவர்களுக்கு சமர்பணம் செய்யப்படுகின்றது.
அவருக்கு நிகர் அவரே

பழமைவாதமும் பாரம்பரிய முறைகளும் இக்கால உலகத்தோடு சேர்ந்தோடுவதற்கு உதவாது என்பதைப் புரிந்துகொண்டு அரச துறையில் பல மாற்றங்களையும் யுக்திகளையும் உட்புகுத்தி வெற்றியும் கண்டவர். அவர் விட்டுச் செல்லும் சுவடுகள் காலமாற்றத்தால் அழிக்கப்பட முடியாதவை. அவரை நினைக்கும் போது அவரது வேகமும் சுறுசுறுப்பும் தான் முதலில் நினைவில் நிற்கும். இத்தனை மெல்லிய மனிதரில் இத்தனை ஆளுமைகளா என வியக்கத் தோன்றும். அகவை அறுபதை அடையும் இந்நாளில் அவர் இலட்சியங்கள் வெற்றிபெற்றிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
***
பிரதம செயலாளரின் சேவை சார்ந்த விடயங்களை பதிவுசெய்யும் நோக்கோடு உருவாக்கப்பட்டதே இவ் வலைப்பதிவு. அவரதும் அவரது சேவை சார்ந்ததுமான விடயங்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எமது மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளுங்கள். இதுவரை பல்வேறுபட்ட ஆக்கங்களை எமக்குத் தந்துதவிய அனைத்து அன்பர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.அன்புடன்
எஸ்.முரளி
OIS TEAM
மின்னஞ்சல்: oisteam@yahoo.com
Rangarajah is a mystic

With regards,
A.Pankayatchelvi.
Friday, February 6, 2009
சிந்தையிலிருந்து சில வரிகள்...

அறிவான சொல்லொன்றும் - எம்
அப்பாவைப் போன்றவரும் - நல்
ஆசானாய் எடுத்துரைப்பார்.
சீலமாய் கற்றுணர்ந்து,
சிந்தையிலே நாம் பதிக்க,
காலத்தால் அழியாத,
கருத்துக்களை அவர் உரைப்பார்.
நெஞ்சுக்குள் ‘டிக்’ என்று,
நேரில் நான் செல்வேனே.,
அஞ்சும் விழியுடனே…
அங்கே நான் சென்றாலும்,
பஞ்சாகிப் போய்விடுமே – நம்
பிரதானி சொற் கேட்டு.
தஞ்சம் கொண்டவரை,
தாய் போலக் காத்திடுவார்.
அலையலையாய் அறிவுரைகள்,
அடுக்கடுக்காய் தந்தீரே,
சிலையாக என் மனதில்,
சித்திரமாய் பதிந்தீரே,
விலையில்லா கருத்துக்களை,
விதை போட்டீர் எனக்குள்ளே,
தலை தாழ்த்தி வணங்கின்றேன்,
தலைமையே உமை நானும்.
-அன்புடன் திருமதி.தி.கல்பனா.
Saturday, January 31, 2009
சமர்ப்பணமாய் ஓர் வலைப்பதிவு

கோர்த்து ஓர் மாலையாக்குவது போல் - நீங்கள் மனதில்
கட்டி வைத்த கோட்டையெல்லாம்
கருத்தினில் கொண்டு செயற்பட்டு
தொட்டுவிட்ட சிகரங்களை
தொகுத்து ஓர் வலைபதிவாக்கி – எதையும்
விட்டவிட மனமில்லாமல்
விருந்தாகக் கொடுக்கின்றோம்
பூஞ்சோலை எம் சபை
அதில் பூத்துக்குழுங்கும் மலர்கள் நாமானால்
அழகான தாமரை நீங்கள் தானே
தா மரை போன்ற எங்களை
தாயன்புடன் ஓன்றிணைத்து
தரணியின் வளர்ச்சியுடன் எம்
தமிழ் மண்ணும் வளர எண்ணி
தனியொரு வலையமைப்பை தந்து
தமிழ் நிமிர எம் தலை நிமிர வைத்தீரே
தங்கள் சேவைக்கு தந்தோம் பரிசாய்
ஓர் வலைப்பதிவு
வட்டமான எம்மறிவை
வலையமைப்பை நிறுவி
வட்டத்தின் வெளியாக்கி
வளர வைத்த உங்களுக்கு,
வாழ்க்கை புத்தகம் போல் ஓர் வலைப்பதிவு
வளரும் நாங்கள் தருகின்றோம்.
எட்ட வைத்துப் பேசும் உயர் அதிகாரிகளின் மத்தியிலே
கிட்ட வந்து பட்டறிவும் கேட்டறிவும் பகிர்ந்து
தொட்டுவிட்ட வேலையினை தோளோடு தோள் நின்று
எட்டிவிடும் முதல்வர் எம் பிரதம செயலாளர்
பெற்றுத் தந்த அறிவால் பெருமையுடன் வளர்ந்த நாம்
கற்று தந்த உங்களுக்கு கணினி வலையினிலே
ஓர் பதிவு பரிசாக தருகின்றோம்.
- அன்புடன் ப.தவராஜா
Friday, January 30, 2009
Yoharajan added some photos of CS.
வட மாகாண வரலாற்றின் ஒரு காவியத் தலைவன்

வட மாகாண சபையில் தகவல் தொழில்நுட்பத்தின் தேவை கண்டு அதற்கு ஒரு பரிமாணம் கொடுத்து அதனை நன்றே நிறுவிய ஓர் சிந்தனையாளர்.
இவர் தனது சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்து தொழிற்பாட்டு தகவல் முறைமை (Operational Information System) எனும் தனி அலகினை திட்டமிடல் செயலகத்தின் கீழ் நிறுவி அதன் மூலம் வட மாகாண சபையினால் வழங்கப்படும் சேவைகள் யாவும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை அடிநாதமாகக் கொண்டு நடைபெறவேண்டும் எனும் வேட்கை கொண்டு அதில் பெரும் வெற்றியும் கண்டு கொண்ட பேராளன்.
மேலும் இவர் தலைமைத்துவம்இ முகாமைத்துவம் இ திட்டமிடல் ஆகியன ஒரு சேர கைதேர்ந்த வட மாகாண வரலாற்றின் ஒரு காவியத் தலைவன் என்று கூறினால் மிகையாகாது. இவரது சிந்தனைகள் மற்றும் செயல் வடிவங்கள் என்றும் வட மாகாண சபையில் நிலைபெற எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
- அன்புடன் க.சடகோபன்.
ஆதவனாய் வாழ்பவரே!

தடம் பதித்த பொன்னாலை பெற்றெடுத்த பெருமகனார்
திடமான தத்துவங்கள் திறம்படவே போதிக்கும்
இடர் தீர்க்கும் உளம் கொண்ட ரங்கராஜா நீர் வாழி
திக்குத் தெரியாது திசை மாறிப் பரிதவித்த
மக்கள் மனமறிந்து மாற்றங்கள் தருவித்து
சிக்கல் பலகளைந்து சிறப்பாக வழிகாட்டும்
காக்கும் பெருங்கடலே காலமெல்லாம் நீர் வாழி
அகவை அறுபதை அடைந்தாலும் இளையவன் நீர்
ஆக்கங்கள் பல தந்து ஆதவனாய் வாழ்பவரே
மாற்றங்கள் பல காண மாயவனாய் வந்துதித்தீர்
பூத்த தாமரையாய் புதுமைகள் செய்கின்றீர்
சமூகத்தின் பக்கமே பார்வைகள் பல கொண்டு
ஏழ்மையை அழிப்பதற்கு எண்ணினீர் திடமாக
குழுவாக உழைப்பதையே குறியாகக் கொண்டவரே
தழுவவில்லை ஒருபக்கம் தவறவில்லை நடுநிலையில்
நிர்வாகத் திறமையுடன் நிலையான திட்டங்கள்
வடகிழக்கு மக்களுக்காய் வரைந்திட்டீர் பக்குவமாய்
நிலைபேற்றுத் தன்மை கொண்ட நிலையான வாழ்வதனை நிறைவாகப் பெற்றிடவே நீர் வகுத்தீர் பலவழிகள்
தன்னிறைவுச் சமூகமதை தருவதற்கு முனைப்புடன்
நின் அறிவுச் சுடரதனை நிரப்பி வைத்தீர் அதற்காக
கண்துஞ்சா பசியறியா முறைமைகள் பல சமைத்து
விண்மகனுக்கிணையாக விரைவுடனே செய்பட்டீர்
தொழில்நுட்ப அறிவுடனே தொலைநோக்கில் சிந்திக்கும்
தெளிவான சிந்தையுடன் திக்கெட்டும் செயற்பட்டீர்
உமக்காக வாழாது உலகம் பயன்பெறவே
தன்னடக்க மனதுடனே தருமனாய் வாழ்கின்றீர்
காலங்கள் கனிந்துவரும் கனவுகள் மெய்ப்பிக்கும்
சாலைகள், கட்டங்கள் சடுதியிலே விருத்தி பெறும்
மக்கள் மனமதிலே மகிழ்ச்சிகள் ஊற்றெடுக்கும்
நீடித்த நிறைவான வாழ்வுகள் நிலைத்துவிடும்
- அன்புடன் இ.உமாகாந்தன்
அகவை அறுபதில் எமது பிரதம செயலாளர்

- அன்புடன் இ.இரவீந்திரன்.
வடக்கின் கலங்கரை விளக்கு

அன்று வடகிழக்காய் இருந்த போது
எட்டு மாவட்டங்களையும்
கட்டி ஆண்ட பிரதம செயலாளரே
இன்று வடக்கின் ஐந்து மாவட்டங்களின்
கலங்கரை விளக்காக திகழ்பவரே
அனைத்து மாகாண சபை அதிகாரிகளும்
ஆலோசனை கேட்டுவரும் ஆசானே
நீர் நீடுழி வாழ எம் வாழ்த்துக்கள்!
பாதியிலே கிடந்த கட்டடத்திலே
ஒட்டு மொத்த மாகாணசபையையும்
ஒருங்கமைத்த சாதனையாளனே
பட்டியலிட்டு கூற முடியாதளவு
புதிய திட்டங்களை வகுக்கும்
சிறந்த திட்டமிடலாளனே
அலுவலர் நாம் அலைச்சலின்றி சென்றுவர
அலுவலக போக்குவரத்துச் சேவையை
உருவாக்கித் தந்த அன்பாளனே
நீர் நீடுழி வாழ எம் வாழ்த்துக்கள்!
அலுவலக குறைநிறைகளை ஆராய
Hotspot ஐயும்
அலுவலரிடையே அறிவைப் பகிர்ந்து கொள்ள
அறிவுப்பகிர்வு நிகழ்ச்சியையும்
அலுவலகத் தகவல்களை அறிந்து கொள்ள
அலுவலகத் தகவல் முறைமையையும்
அலுவலகங்களிடையே தொடர்பாடலை ஏற்படுத்த
உள்ளக வலையமைப்பையும்
உருவாக்கித் தந்தவரே
நீர் நீடுழி வாழ எம் வாழ்த்துக்கள்!
நவீன கணினியுகத்திற்குள் நம்மை எல்லாம்
இட்டுச் சென்றவரே
இரவு பகல் பாராது விடுமுறை நாள் பாராது
நோய் நொடியைப் பொருட்படுத்தாது
கடமையே கண்ணென்று வாழும்
பிரதம செயலாளரே
நீர் நீடுழி வாழ எம் வாழ்த்துக்கள்!
- அன்புடன் க.மதுராந்தகி
Thursday, January 29, 2009
உன்னத சேவையாளன்

- அன்புடன் ரி.குலவீரசிங்கம்
வடக்கின் வழிகாட்டி

சேர்ந்தமைந்த செயல்வீரன்
திட்டமிட்டு செயலாற்றும்
தீர்க்க சிந்தனை உளம் உடையோன்
அன்பும் அரவணைப்பும் ஆழ்ந்த நல்நட்பும்
பக்குவமாய் பழகும் பாங்குமுள்ள பண்புடையோன்
எண்ணிய கருத்தை எச்சபையிலும் எடுத்தியம்பும்
திண்ணிய சிந்தனை கொண்டோன்
அரசபணி ஆன்மீகம் அறிவியல் அரசியல்
அனைத்திலும் ஆழ்ந்த அறிவுடையோன்
எடுத்தபணி யாவையும் இரவு பகல் பாராது
முற்றும் முடித்துவிட துடிக்கும் வீச்சாளன்
தகவல் தொழில்நுட்ப தந்திரத்தை புரிந்து வைத்து
புதுப்புது புதுமைகளைப் படைக்கும் புரட்சிவீரன்
வலையமைப்பு வலைப்பதிவு என வளர்த்துவரும்
எங்கள் வடக்கின் வழிகாட்டி
- அன்புடன் பா.கஜேந்திரன்
நுட்பத்தின் நுட்போன்
என் வாழ்க்கைப் புத்தகத்தில் நீங்கள் ஓர் அத்தியாயம்

முதன் முதலில் சந்தித்தேன்.
அன்றே OIS இல் நானும் ஓர் Member ஆனேன்
அன்றிலிருந்து
கற்றவற்றை மீட்டு
கல்லாதவற்றை கற்றுணர்ந்து
பெற்றிட்டேன் நல்லறிவு
பெருமையுடன் சொல்கின்றேன்
உங்களால் தான்
Website ஒன்றை நானே வடிவமைத்து
வலையமைப்பில் உலாவரச் செய்ய
வல்லமை பெற்றுத் தந்து
வாழ்நாளில் மறக்காத மனிதரானீர்
உங்கள் வாழ்க்கை என்னும் புத்தகத்தில்
நாமெல்லாம் ஓர் வரியானால்
எம் வாழ்க்கைப் புத்தகத்தில் நீங்கள்
ஓர் அத்தியாயம் ஆவீர்கள்
-அன்புடன் ப.தவராஜா
Thushi added some photos of Chief Secretary
Subscribe to:
Posts (Atom)