Friday, January 30, 2009

வடக்கின் கலங்கரை விளக்கு

அன்று வடகிழக்காய் இருந்த போது 
எட்டு மாவட்டங்களையும் 
கட்டி ஆண்ட பிரதம செயலாளரே
இன்று வடக்கின் ஐந்து மாவட்டங்களின் 
கலங்கரை விளக்காக திகழ்பவரே
அனைத்து மாகாண சபை அதிகாரிகளும்
ஆலோசனை கேட்டுவரும் ஆசானே
நீர் நீடுழி வாழ எம் வாழ்த்துக்கள்!

பாதியிலே கிடந்த கட்டடத்திலே 
ஒட்டு மொத்த மாகாணசபையையும்
ஒருங்கமைத்த சாதனையாளனே
பட்டியலிட்டு கூற முடியாதளவு 
புதிய திட்டங்களை வகுக்கும் 
சிறந்த திட்டமிடலாளனே
அலுவலர் நாம் அலைச்சலின்றி சென்றுவர
அலுவலக போக்குவரத்துச் சேவையை
உருவாக்கித் தந்த அன்பாளனே
நீர் நீடுழி வாழ எம் வாழ்த்துக்கள்!

அலுவலக குறைநிறைகளை ஆராய
Hotspot ஐயும்
அலுவலரிடையே அறிவைப் பகிர்ந்து கொள்ள 
அறிவுப்பகிர்வு நிகழ்ச்சியையும்
அலுவலகத் தகவல்களை அறிந்து கொள்ள
அலுவலகத் தகவல் முறைமையையும்
அலுவலகங்களிடையே தொடர்பாடலை ஏற்படுத்த
உள்ளக வலையமைப்பையும்
உருவாக்கித் தந்தவரே
நீர் நீடுழி வாழ எம் வாழ்த்துக்கள்!

நவீன கணினியுகத்திற்குள் நம்மை எல்லாம்
இட்டுச் சென்றவரே
இரவு பகல் பாராது விடுமுறை நாள் பாராது
நோய் நொடியைப் பொருட்படுத்தாது
கடமையே கண்ணென்று வாழும்
பிரதம செயலாளரே
நீர் நீடுழி வாழ எம் வாழ்த்துக்கள்!

- அன்புடன் க.மதுராந்தகி

No comments:

Post a Comment