Saturday, January 31, 2009

சமர்ப்பணமாய் ஓர் வலைப்பதிவு

கொட்டிவிட்ட மலர்களை
கோர்த்து ஓர் மாலையாக்குவது போல் - நீங்கள் மனதில்
கட்டி வைத்த கோட்டையெல்லாம்
கருத்தினில் கொண்டு செயற்பட்டு
தொட்டுவிட்ட சிகரங்களை
தொகுத்து ஓர் வலைபதிவாக்கி – எதையும்
விட்டவிட மனமில்லாமல்
விருந்தாகக் கொடுக்கின்றோம்

பூஞ்சோலை எம் சபை
அதில் பூத்துக்குழுங்கும் மலர்கள் நாமானால்
அழகான தாமரை நீங்கள் தானே
தா மரை போன்ற எங்களை
தாயன்புடன் ஓன்றிணைத்து
தரணியின் வளர்ச்சியுடன் எம்
தமிழ் மண்ணும் வளர எண்ணி
தனியொரு வலையமைப்பை தந்து
தமிழ் நிமிர எம் தலை நிமிர வைத்தீரே
தங்கள் சேவைக்கு தந்தோம் பரிசாய்
ஓர் வலைப்பதிவு

வட்டமான எம்மறிவை
வலையமைப்பை நிறுவி
வட்டத்தின் வெளியாக்கி
வளர வைத்த உங்களுக்கு,
வாழ்க்கை புத்தகம் போல் ஓர் வலைப்பதிவு
வளரும் நாங்கள் தருகின்றோம்.

எட்ட வைத்துப் பேசும் உயர் அதிகாரிகளின் மத்தியிலே
கிட்ட வந்து பட்டறிவும் கேட்டறிவும் பகிர்ந்து
தொட்டுவிட்ட வேலையினை தோளோடு தோள் நின்று
எட்டிவிடும் முதல்வர் எம் பிரதம செயலாளர்
பெற்றுத் தந்த அறிவால் பெருமையுடன் வளர்ந்த நாம்
கற்று தந்த உங்களுக்கு கணினி வலையினிலே
ஓர் பதிவு பரிசாக தருகின்றோம்.

- அன்புடன் ப.தவராஜா

No comments:

Post a Comment