Friday, January 30, 2009

வட மாகாண வரலாற்றின் ஒரு காவியத் தலைவன்

எமது பிரதம செயலாளர் மதிப்பிற்குரிய திரு சி.ரங்கராஜா அவர்களைப் பற்றி கூறுவதாயின் அவை அளப்பரியன. அவர் பிரதம செயலாளராக இருந்த காலப்பகுதியில் அவர் ஆற்றிய பணிகளில் ஒன்றான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான பணிகளை பற்றி கூறுவது இன்றியமையாதது.
வட மாகாண சபையில் தகவல் தொழில்நுட்பத்தின் தேவை கண்டு அதற்கு ஒரு பரிமாணம் கொடுத்து அதனை நன்றே நிறுவிய ஓர் சிந்தனையாளர்.
இவர் தனது சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்து தொழிற்பாட்டு தகவல் முறைமை (Operational Information System) எனும் தனி அலகினை திட்டமிடல் செயலகத்தின் கீழ் நிறுவி அதன் மூலம் வட மாகாண சபையினால் வழங்கப்படும் சேவைகள் யாவும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை அடிநாதமாகக் கொண்டு நடைபெறவேண்டும் எனும் வேட்கை கொண்டு அதில் பெரும் வெற்றியும் கண்டு கொண்ட பேராளன்.
மேலும் இவர் தலைமைத்துவம்இ முகாமைத்துவம் இ திட்டமிடல் ஆகியன ஒரு சேர கைதேர்ந்த வட மாகாண வரலாற்றின் ஒரு காவியத் தலைவன் என்று கூறினால் மிகையாகாது. இவரது சிந்தனைகள் மற்றும் செயல் வடிவங்கள் என்றும் வட மாகாண சபையில் நிலைபெற எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

- அன்புடன் க.சடகோபன்.

No comments:

Post a Comment